tamilnadu

குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தினால் கடும் நடவடிக்கை

 விழுப்புரம், ஜூன் 8- விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனம் நகராட்சி எச்சரித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஸ்ரீபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திண்டிவனம் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையங்க ளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இந்நிலையில், நகராட்சி யின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் இணைப்புகளில் இருந்து மின்  மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது சட்ட விரோதமாகும். எனவே வீட்டு  குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தியிருந்தால் அவற்றை  தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். மண்டல நகராட்சி நிர்வாக  இயக்குனர் உத்தரவின் பேரில் நகராட்சி பகுதியில் 2 குழுக்கள் அமைக்  கப்பட்டு மின் மோட்டார் பொருத்தியுள்ள இணைப்புகள் குறித்து ஆய்வு  செய்யப்பட்டு வருகிறது. ஆய்வின்போது மின் மோட்டார் பொருத்தி குடிநீர்  எடுப்பது கண்டறியப்பட்டால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படு வதுடன் அபராதம் விதித்து குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.  விரைவில் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்  கீழ் டி.எம்.ஜி. நகர், தீர்த்தகுளம், அகழிகுளம், திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு, அவற்றின்  மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. நகராட்சி பகுதியில்  உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பணி நடைபெற்று  வருகிறது.  எனவே, அனைத்து குடியிருப்புதாரர்களும் குடிநீர் இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்குரிய வைப்புத்தொகை மற்றும் கட்டணங்களை 10 சம தவணைகளில் செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.